ஒவ்வொரு கண்ணாமூச்சி விளையாட்டிலும் ஒரே இடத்தில் ஒளியும் தம் குழந்தைகளை ஒரு முறை கூட கண்டு பிடிக்க முடிவதில்லை பாசமுள்ள அப்பாக்களால்! அதே பிள்ளை பின்னால் அப்பாவை மறந்து வேறிடத்தில் பாசம் வைத்து விலகிச் சென்று கண்ணாமூச்சி ஆடுகிறான் பாவப்பட்ட பாசத் தந்தையோடு!
தேவையான கருத்துக்களை ஏற்றுக் கொள்வோம்..! தேவையற்ற கருத்துக்களை தணிக்கை செய்வோம்! நடக்கக் கூடும் நம்பிக்கைகளை மனதில் கொள்வோம்! தேவையற்ற எண்ணங்களை தணிக்கை செய்வோம்! பிள்ளைகளை நல்லவழி நடக்க அறிவுரைப்போம்! நல்லன அல்லாத வழிகளை தணிக்கை செய்வோம்!
அசரீரி புராண காலங்களில் ஒலித்ததாகவும் அதன்படியே நடந்ததாகவும் கதைகளில் படித்ததுண்டு. கம்சனுக்கு வானிலிருந்து ..உன் சகோதரியின் எட்டாவது மகன் உன்னைக் கொல்வான்..என்ற அசரீரி கேட்டதாலேயே அவன் தேவகியின் ஏழு குழந்தைகளைக் கொன்றான். இந்தக் காலத்தில் நாம் ஏதாவது பேசும்போது பல்லி கத்தினால் அந்தக் காரியம் நடக்கும் என்பர். 'பல்லி சொல்லுக்கு பலன்'என்று பஞ்சாங்கத்தில் உண்டு. இதுதான் இந் நாளைய அசரீரி. நாம் நிறைய பேர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு ஒரு நல்ல விஷயம் பேசும்போது..அதெல்லாம் சரிவராது..என்று நமக்கு சம்பந்தமில்லாதவர் வேறு விஷயத்துக்கு சொல்லும் போது சட்டென்று அது நமக்கு அபசகுனமாகத் தோன்றும். அதனால்தான் திருமணங் களில் தாலி கட்டும் நேரம் கெட்டிமேளம் ஒலிக்கப் படுவது. யாரும் அந்த நேரத்தில் அபசகுனமாகப் பேசினால் காதில் விழாது.
Comments
Post a Comment