தேவையான கருத்துக்களை ஏற்றுக் கொள்வோம்..! தேவையற்ற கருத்துக்களை தணிக்கை செய்வோம்! நடக்கக் கூடும் நம்பிக்கைகளை மனதில் கொள்வோம்! தேவையற்ற எண்ணங்களை தணிக்கை செய்வோம்! பிள்ளைகளை நல்லவழி நடக்க அறிவுரைப்போம்! நல்லன அல்லாத வழிகளை தணிக்கை செய்வோம்!
காதல்..அந்த வார்த்தை எந்த மனிதரையும் சிலிர்க்க வைக்கும். மகிழ்ச்சி தரும். காதல் என்றாலே மனம் வானத்தில் பறக்கும். அந்தக் காதலியோ காதலனோ உடனிருந்து விட்டால் மனமும் உடலும் துள்ளிக் குதிக்கும். கண்கள் கிறங்க மனது கும்மாளமிட இப்படியே வாழ்நாள் முழுதும் இருந்துவிட மாட்டோமா என்று எண்ணத் தோன்றும். சின்னச்சின்ன ஊடல்கள் பிரிவதற்கல்ல காதலை வளர்ப்பதற்கு. காதல் வந்துவிட்டால் மனம் கும்மாளம் போடும்.. வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக் குதிக்கும்.
காலை எழுந்ததும் கண்மூடி தியானித்து கருத்தொருமிப்போம்! நடையும் ஓட்டமும் நாளும் பழகினால் நன்மைகள் பலப்பல! அறுசுவை உணவில் உள்ளது ஆரோக்கியம்! அதையும் அளவாய் சாப்பிட்டால் அருமருந்தாகும் நிச்சயம்! அதிக நேர உறக்கம் சோம்பலை ஏற்படுத்தும்! அரை வயிறு உண்போம்!அளவாய் தூங்குவோம்! அனுதினமும் உழைப்போம்! ஆரோக்யமாய் வாழ்வோம்!
Comments
Post a Comment